பாலாலயம்
பழைய கோவில்கள், பூஜை செய்ய ஏதுவற்ற கோவில்களை மீண்டும் கும்பாபிஷேகம் செய்து தான் நித்திய பூஜை செய்ய வேண்டும். அதனால்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது அவசியம். கும்பாபிஷேகம் செய்யாமல் பூஜை செய்தால் உலகிற்கு தீமை உண்டாகும். பாலாலயம் செய்து, கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்தையும் குறைவில்லாமல் செய்கிறபோது, இடையில் நிகழ்ந்த பூஜை குறைபாடுகள் நீங்கி, ஊர் நன்மை பெரும். அப்படி புனர்நிர்மாணம் செய்கிறபோது, தெய்வ விக்ரகங்களை பாதுகாப்பதற்கும், நித்திய பூஜைகள் நிற்காமல் நடைபெறவும் செய்யப்படுவதே பாலாலயம். இதனை இளங்கோவில் எனவும் சொல்லுவார்கள். நாம் வீட்டை புதுப்பித்து கட்டும்போது, சிறிது காலம் வாடகை வீட்டில் குடியிருப்பது போல இதனை ஒப்பிடலாம். நம் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வது போல, கும்பாபிஷேகத்தையும் குறையில்லாமல் செய்ய வேண்டும். அப்படியாக, 2020 ஆக 30 ஆம் நாளான இன்று, ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம், கடைவீதியில் அமைத்துள்ள, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான பாலாலய விழா, சீரும் சிறப்போடும் நடைபெற்றது. அதனின் புகைப்படத்தொகுப்பு இங்கே. இப்பகுதியின் இறுதியில் வீடியோ காணொளி லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. அதனையும் கண்டுகளியுங்கள்